புதுடில்லி : பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்த, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது.கடந்த 15ம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் பெட்ரோல் விலை 68 ரூபாயை தாண்டிவிட்டது. "இவ்வளவு விலை உயர்த்தியும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 4.58 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது' என, இந்நிறுவன தலைவர் புட்டோலா தெரிவித்துள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில், "கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் விலை மேலும் உயர்த்தப்படும். அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் காணப்படும் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை உயர்த்தப்படும். ஒரு லிட்டர் டீசலுக்கு தற்போது 14 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 380 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு 25.85 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது' என்றார்.பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், அடுத்த மாதம் 9ம் தேதி அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
31 மே, 2011
மீண்டும் உயர்கிறது பெட்ரோல் விலை
புதுடில்லி : பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்த, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது.கடந்த 15ம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் பெட்ரோல் விலை 68 ரூபாயை தாண்டிவிட்டது. "இவ்வளவு விலை உயர்த்தியும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 4.58 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது' என, இந்நிறுவன தலைவர் புட்டோலா தெரிவித்துள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில், "கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் விலை மேலும் உயர்த்தப்படும். அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் காணப்படும் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை உயர்த்தப்படும். ஒரு லிட்டர் டீசலுக்கு தற்போது 14 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 380 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு 25.85 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது' என்றார்.பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், அடுத்த மாதம் 9ம் தேதி அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.