அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

4 ஜூன், 2011

கூடாநட்பு கேடாய் முடியும்: கருணாநிதி


சென்னை, ஜூன்.3: கூடா நட்பு கேடாய் முடியும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருணாநிதிக்கு இன்று 88-வது பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி இன்று காலை 7.30 மணியளவில் அண்ணா நினைவிடத்தில் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு அவர் கூறிய செய்தியில், சமுதாய எழுச்சிக்காகவும், அரசியல் மறுமலர்ச்சிக்காகவும் ஒப்படைத்துக் கொண்ட தொண்டர்கள் கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை மறந்து விடாமல் தங்கள் பயணத்தை தொடர வேண்டும் என்று குறிப்பிட்டார். பின்னர் மாமல்லபுரம் புறப்பட்டுச் சென்றார்.
வழக்கமாக பிறந்தநாளில் கருணாநிதி தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுவார். ஆனால் இந்த முறை தொண்டர்களை சந்திக்க மாட்டார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் திமுக முன்னணி தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தனர்.
காலை 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்த கருணாநிதி தொண்டர்களைப் பார்த்து கைகளை அசைத்துவிட்டு அண்ணா நினைவிடத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
கனிமொழியை சந்திக்க கருணாநிதி இன்று தில்லி செல்வார் என முன்னதாக தகவல்கள் வெளியாயின. எனினும்  அவர் தில்லி செல்லவில்லை. மாறாக ஓய்வெடுப்பதற்காக மாமல்லபுரம் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
free counters